வாட்ஸாப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாட்ஸாப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

வாட்ஸாப் தனது சேவை விதிமுறைகளுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கான பிப்ரவரி 08 எனும் காலக்கெடுவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தனியுரிமை குறித்த கவனத்தில் வாட்ஸாப் பயனர்கள் சேவையிலிருந்து விலகி, போட்டியாளர்களான டெலிகிராம் மற்றும் சிக்னலுக்கு திரண்டதால், வாட்ஸாப் நேற்று (15) பேஸ்புக் உடனான தரவு பகிர்வு மாற்றத்தை தாமதப்படுத்தியது.

$ads={2}

“விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளும்படி மக்கள் கேட்கப்படும் திகதியை நாங்கள் இப்போது பிற்போட்டு வருகிறோம்” என்று வாட்ஸாப் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களின் தெரிவித்துள்ளது.

அதன்படி, பேஸ்புக் சேவையகங்களுடன் தரவைப் பகிர்வது சம்பந்தமாக, அதன் சேவை விதிமுறைகளுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கான பிப்ரவரி 08 காலக்கெடுவை வாட்ஸாப் ரத்து செய்தது.

அதற்கு பதிலாக “மே 15ஆம் திகதி வரை புதிய வணிக சேவை விதிமுறைகளை பயனர்கள் படிப்படியாக மதிப்பாய்வு செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இது தொடர்பாக நாம் எந்த வாட்ஸாப் கணக்குகளையும் ஒரு போதும் நீக்கப் போவதில்லை" என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.