மினுவங்கொடையில் அடக்கம் செய்யப்பட்ட பெண்; முழு தகவல் அடங்கிய விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மினுவங்கொடையில் அடக்கம் செய்யப்பட்ட பெண்; முழு தகவல் அடங்கிய விபரம் வெளியானது!

மினுவாங்கொடை - கல்லொழுவை பிரதேசத்தில் அண்மையில் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கோ மற்றும் அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கோ கொரோனா தொற்று இல்லை என பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

$ads={2}

பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல் இப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொருவரின் உடலை அடக்கம் செய்திருப்பது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸில் கிராம சேவை அதிகாரியினால் கடந்த 08 ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததையடுத்து.

இது தொடர்பிலான அறிக்கையொன்றினை குடும்பத்தார் மூலமாகப் பெற்றுத்தருமாறு மினுவாங்கொடை பொலிஸாரினால் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வரவழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர், மரணித்து அடக்கம் செய்யப்பட்ட குறித்த பெண்ணின் குடும்ப உறவினர்களிடம் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோது, "எவருக்கும் கொரோனா தொற்றில்லை" என உறுதிப்படுத்தினார். 

இதனை மையமாக வைத்து, "மரணித்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதனால், இவரை அடக்கம் செய்ததில் தவறில்லை" எனவும் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, "மரணித்த பெண் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுமில்லை. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடனான தொடர்புகளை வைத்திருந்தவராக இருக்கவுமில்லை. இப்பெண், நீண்டகாலமாக சுகயீனமாக இருந்துள்ளார். இதன்காரணமாகவே இவர் மரணித்துள்ளார்" என்ற விபரங்கள் அடங்கிய விரிவான தகவல்களும் குடும்பத்தாரிடமிருந்து தெளிவாகப் பெறப்பட்டு, இதன் அறிக்கையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவு பெற்றதாகவும், பிரதேச சுகாதாரப் பரிசோதகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

-ஐ. ஏ. காதிர் கான்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.