கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி பரிந்துரைக்கப்பட்டதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி பரிந்துரைக்கப்பட்டதா?

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட இரண்டாவது நிபுணத்துவக்குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தகவலை சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ளது.

உடல்கள் தகனம் செய்வதா அல்லது புதைப்பதா என்கின்ற விவகாரத்தில் சுகாதார அமைச்சினால் முதலாவதாக நியமிக்கப்பட்டிருந்த குழு, தகனம் செய்வதே சிறந்தது என்பதை பரிந்துரைத்திருந்தது.


$ads={1}


எனினும் அதற்கெதிராக பல வழிகளிலும் போராட்டங்களும், எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டிருப்பதால் இரண்டாவது நிபுணர் குழுவையும் அமைச்சு நியமித்தது.

இந்த நிலையில் குறித்த குழு தற்சமயம் பரிந்துரையை அமைச்சிடம் நேற்று வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில், தகனம் செய்தல் மற்றும் புதைத்தல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்க முடியும் என்கிற பரிந்துரை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இவ்விரு குழுவினரையும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று சந்தித்த போதிலும் இறுதி இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

$ads={1}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.