முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு; அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை சீனா மறுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு; அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை சீனா மறுப்பு!


சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசாங்கம், இன அழிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை சீனா மறுத்துள்ளது.


அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பை மைக்கேல் பொம்பேயோ வெளியிட்டார்.


$ads={2}


இந்தத் தகவல்கள் அனைத்தும் பொய்யான செய்திகள் என மறுத்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங், இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பொம்போயோ, தனது பதவிக் காலம் முழுவதும் சோடிக்கப்பட்ட, உணர்ச்சிமயமான பொய்களைக் கூறி வந்துள்ளார். தற்போது ஜின்ஜியாங் மாகாணத்தில் இன அழிப்பு நடைபெறுவதாக அவர் கூறுவதும் அத்தகைய தவறான தகவலே ஆகும்.


சீனாவில் இன அழிப்பு என்பது இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை, தற்போதும் நடைபெறவில்லை, இனியும் நடைபெறாது’ என கூறினார்.


உய்கர் பெண்களுக்கு கட்டாயமாக கருத்தடை செய்வது, அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.