அடுலுகம உட்பட மேலும் பல பகுதிகள் விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுலுகம உட்பட மேலும் பல பகுதிகள் விடுவிப்பு!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டம் – பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.

  1. 659 இ போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  2. 659 சி பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  3. கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  4. கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  5. 660 பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  6. அடுலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  7. அடுலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  8. எபிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  9. கல்கெமன்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
அத்துடன், இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

நாளை அதிகாலை 5.00 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.