நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டம் – பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.
- 659 இ போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு,
- 659 சி பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,
- கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு,
- கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு,
- 660 பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,
- அடுலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு,
- அடுலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு,
- எபிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,
- கல்கெமன்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
அத்துடன், இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
நாளை அதிகாலை 5.00 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.