சொந்த சிறுநீரகத்தை விற்று ஹெரோயின் பயன்படுத்திய நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொந்த சிறுநீரகத்தை விற்று ஹெரோயின் பயன்படுத்திய நபர் கைது!


திருடிய குற்றச்சாட்டில் கைதான நபரொருவர் தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்று அந்த பணத்தை ஹெராயின் போதைப் பொருள் வாங்க பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.


குறித்த சந்தேகநபர் மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழங்கிய வாக்குமூலத்திலேயே இந்த விடயம் வெளியானது.


$ads={2}


துணிகளைத் திருடியதாக மஹரகமவின் பமுனுவ பகுதியில் ஆடை விற்பனையாளர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து அவர் கடந்த திங்கள் அன்று கைது செய்யப்பட்டார்.


36 வயதுடைய குறிப்பிட்ட நபர் தனது சிறுநீரகத்தை விற்று ரூ .2 மில்லியனைப் பெற்றதாகவும், ஆனால் ஹெராயின் கொள்வனவு செய்து பணம் அனைத்தையும் இழந்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.


அவர் அவ்வப்போது பமுனுவ பகுதியிலிருந்து சுமார் இதுவரை ரூ .1.5 மில்லியன் மதிப்புள்ள துணிகளை திருடி புறக்கோட்டையில் உள்ள வணிகர்களுக்கு விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


திருடப்பட்ட துணிகளை விற்பதன் மூலம் பெற்ற பணத்தையும் ஹெராயின் வாங்கவே பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார் அந்த திருடன்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.