தகனம் செய்யும் விவகாரம்; உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்! -அமெரிக்கா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தகனம் செய்யும் விவகாரம்; உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்! -அமெரிக்கா


கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விடயத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி ஒவ்வொருவரும் அவர்களது நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அதனூடாக அவர்களின் உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கை நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்ததுடன், அதனால் ஏற்பட்ட சர்ச்சை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


$ads={2}


இத்தகைய பின்னணியின் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.


இலங்கையினால் 1955 ஆம் ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 18ஆவது சரத்தின்படி ஒவ்வொருவரும் தமது மதம் அல்லது நம்பிக்கையினைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உள்ளது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மேலும் கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச ரீதியில் பல்வேறு சவால்களைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும் அது பிறரது நம்பிக்கைக்கு மதிப்பளித்தல் மற்றும் இரக்கம் காட்டுதல் ஆகிய குணவியல்புகளில் தாக்கத்தையோ இழப்பையோ ஏற்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருக்கும் அமெரிக்கத்தூதுவர்,


இந்த வைரஸ் தொற்றின் விளைவாக தமது அன்பிற்குரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.