நாட்டில் மேலும் இரு பிரதேசங்கள் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மேலும் இரு பிரதேசங்கள் முடக்கம்!


மினுவாங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


$ads={2}


இதன்பிரகாரம், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லொழுவை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


அத்துடன், மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரக்காமுறை, மீதெனிய மற்றும் தெஹிபிட்டிய ஆகிய கிராம சேவகர் பிரிவுளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


-ஐ. ஏ. காதிர் கான்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.