மூன்று முக்கிய கட்டுப்பாடுகளுடன் வணிக விமான நடவடிக்கைகளை ஆரம்பவிருக்கும் இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று முக்கிய கட்டுப்பாடுகளுடன் வணிக விமான நடவடிக்கைகளை ஆரம்பவிருக்கும் இலங்கை!


எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி முதல் இலங்கையில் விமான நிலையங்களின் வணிக நடவடிக்கைகளை துவங்க உத்தியேசித்துள்ள நிலையில், இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.


$ads={2}


சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், BIA மற்றும் MRIA ஆகியவற்றில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான மூன்று முக்கிய வழிகாட்டுதல்களை எடுத்துக்காட்டுகிறது.


மேலும் கொரோனா தடுப்பு பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.


1. இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் மீளழைத்துவரும் விமானங்களின் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையின் கட்டுப்பாடு இருக்காது. (முன்னதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன)


2. கட்டணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் முறையில் இலங்கைக்கு மீள் அழைத்துவரப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 750 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (மேலும் ஒரு விமானத்தில் கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தல் முறையில் அழைத்துவரப்படும் நபர்கள் 75 ஆகவும் மீதம் உள்ள ஆசனங்களை சுற்றுலா பயணிகள் நிரப்ப முடியும்.)


3. இலங்கைக்கு அழைத்துவரப்படும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2,500 பேரை மிஞ்சாமல் இருத்தல் வேண்டும்.


-எம்.எம்.எம். அஹ்மத்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.