தென்னை மற்றும் பனங் கள்ளு; உடன் அமுலாகும் வகையில் விலை குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தென்னை மற்றும் பனங் கள்ளு; உடன் அமுலாகும் வகையில் விலை குறைப்பு!

போத்தலில் அடைக்கப்பட்ட தென்னை மற்றும் பனங் கள்ளுக்கான அரச வரி உடன் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.


இதன்படி, நேற்று முன்தினம் (08) முதல் கள் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 50 ரூபாவிலிருந்து 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.


$ads={2}

தென்னை மற்றும் பனை என்பவற்றினால் தயாரிக்கப்படும் கள் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை குறைக்குமாறு, நாடாளுமன்ற குழுக்களின் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் ராமநாதன், விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிடம் கோரிக்கை முன் வைத்திருந்தார்.


இதனையடுத்து, குறித்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.


இந்நிலையிலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்துலுக்கு அமைய, தென்னை மற்றும் பனை என்பவற்றினால் தயாரிக்கப்படும் கள் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கள் தவறணைகளின் விற்பனை நேரத்தை மேலும் இரண்டு மணித்தியாலங்களினால் நீடிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி, கள் தவறணைகளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரையும், பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையும் திறந்து வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய திருத்தங்களின் பிரகாரம், தனிநபர் ஒருவரினால் கொள்வனவு செய்ய முடியுமான கள்ளின் அளவு, 1.5 லீட்டரிலிருந்து 3 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மேலும் மூன்றுக்கு அதிக லீட்டர்களுடன் பயணிக்க விசேட அனுமதிப் பத்திரம் பெற்றிருக்க வேண்டும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.