இலங்கையர்களை அழைத்து வருவதில் ஊழல் − தகவல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையர்களை அழைத்து வருவதில் ஊழல் − தகவல் வெளியானது!

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையின் பின்னணியில், மாபியா செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொகையான பணத்தை செலவிட்டு, நாட்டிற்கு அழைத்து வரப்படும் இலங்கையர்களிடம், மீண்டும் பெருமளவிலான பணத்தை அறவிட்டு, அவர்களை நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களிடமிருந்து, சிலர் பணத்தை சூரையாடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாடொன்றிலிருந்து ஒருவர் நாட்டிற்கு வருகைத்தந்து, அவர் தனது வீட்டிற்கு செல்லும் போது, சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான தொகையை செலவிடுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.

இவ்வாறான செயற்பாடானது, பாரிய அநீதி எனவும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.