பாராளுமன்ற கொத்தணி ஆரம்பமானது - ஐவருக்கு கொரோனா தொற்று, பலர் தனிமைபடுத்தலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற கொத்தணி ஆரம்பமானது - ஐவருக்கு கொரோனா தொற்று, பலர் தனிமைபடுத்தலில்!

இலங்கை பாராளுமன்றத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும், பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


$ads={2}

இந்த நிலையில் பாராளுமன்றில் சகலரும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய கடந்த வியாழக்கிழமை (14) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் ஐந்து அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், நேற்றும் (15) சிலருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் 463 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்ற பணியாளர்களுடன் பாராளுமன்ற பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 448 பேர் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவர்களில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.