கூரையில் ஏறிய அக்குரணை புஹாரி என்பவர் தவறி விழுந்து மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கூரையில் ஏறிய அக்குரணை புஹாரி என்பவர் தவறி விழுந்து மரணம்!

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரிசி ஆலை ஒன்றின் கூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் நபரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (19) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அக்குறனை - 07ம் கட்டை பகுதியைச் சேர்ந்த முஹம்மத் யூசுப் முஹம்மத் புஹாரீ (60 வயது) எனவும் தெரியவருகின்றது.


$ads={2}

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலுள்ள அரிசி ஆலை ஒன்றில் போடப்பட்டிருந்த சீட் உடைந்த நிலையில் கிடந்ததாகவும் அதனை மாற்றுவதற்காக கூரை மேல் ஏறிய நிலையில் தவறுதலாக விழுந்து கழுத்து உடைந்த நிலையில் ஹொரவ்பொத்தான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முஹம்மட் ஹாசில்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.