கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறி இதுதான் !!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறி இதுதான் !!!!!

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டங்’(Covid Tongue)  என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு வெளிப்புறத்தில் காயங்கள், சிவந்த கொப்புளங்கள், சிவந்த புள்ளிகள் போன்றவை உருவாகும் என குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

எவரேனும் இந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களுக்கு மிக விரைவில் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்குகூட தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.