வெளிநாட்டு துப்பாக்கியுடன் பெண்ணொருவர் கைது; மாத்தளை பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டு துப்பாக்கியுடன் பெண்ணொருவர் கைது; மாத்தளை பகுதியில் சம்பவம்!


மாத்தளை பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி, வெற்றுத் தோட்டாக்களுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பகுதியில் நேற்று பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


$ads={2}


பதுளை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31, 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், வெற்று தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.