தேர்தல் நடத்தினால் கோட்டாவுக்கு தோல்வி நிச்சியம்; புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல் நடத்தினால் கோட்டாவுக்கு தோல்வி நிச்சியம்; புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை?


தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்திற்கு பாரிய தோல்வி ஏற்படுமென புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கண்டி செங்கடகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் கூறினார்.


$ads={2}


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


மாகாண சபைகளுக்கான தேர்தலை தற்சமயம் அரசாங்கம் நடத்தினால் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படும் என்கின்ற தகவல் புலனாய்வுப் பிரிவுகளால் அரச உயர்பீடத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு அறிக்கைகளில் காணப்படுகின்றன.


இந்த அச்சம் காரணமாகவே அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்து வருகின்றது.


அரச புலனாய்வுத்துறை இரண்டு பகுதிகளாக புலனாய்வு செய்திருக்கின்ற நிலையில் அதில் அரசாங்கத்தின் படுதோல்வி நிச்சயமாக உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.