திடீரென வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திடீரென வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்!

புத்தளம் மாவட்டம் முத்துபந்தி தீவில் சுமார் மூன்றடி உயரமான கடல் நீர் தீடீரென கரை புகுந்ததாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த பகுதியிலுள்ள வீடுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளதால் அவசர நிலைமை ஏற்பட்டது.

அத்துடன் அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கல் வேலியில் இருந்த கற்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், கடல் அலையுடன் வந்த குப்பைகள் வீடுகளுக்கு அருகில் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

$ads={2}

இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் கூட இந்தளவு பாரிய அலைகள் ஏற்படும் என முன்கூட்டிய அறிவித்திருக்கவில்லை என பிரதேசவாசிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

மேலும் சுனாமி ஏற்பட்ட போது கூட இந்தளவு கடல் நீர் தீவுக்குள் வரவில்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.