அரசாங்கம் உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தது ஏன் தெரியுமா? - பா. உ முஜிபுர் ரஹுமான்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்கம் உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தது ஏன் தெரியுமா? - பா. உ முஜிபுர் ரஹுமான்

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகக் கூறி , அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களின் வணிகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் தான் ஆகஸ்ட் மாதம் முதல் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நாடான உக்ரைனிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் அச்சுறுத்தலால் கொழும்பில் பல பகுதிகள் சுமார் 2 மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களின் பின்னரும் அவற்றை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியாத நிலையிலிருந்து கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளமை தெளிவாகிறது. ஆரம்ப கட்டத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரித்து விரைவில் கொழும்பை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் வலியுறுத்திய போதும் அரசாங்கம் அதற்கான எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.


$ads={2}

இவ்வாறான நிலைமைக்குள் சுற்றுலாத்துறையை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் முதற்கட்டமாக உக்ரையினிலிருந்து சுற்றுலா பிரயாணிகள் வரழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் உக்ரைன் நாட்டில் பல மில்லியன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் நாட்டிலிருந்து சுற்றுலாப்பிரயாணிகள் வரழைக்கப்படுகின்றமை முறையற்ற செயற்பாடாகும். அந்நாட்டிலிருந்து வந்தவர்களில் சிலருக்கு தற்போது தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பிலும், அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்களது சுற்றுலாக் காலம் நிறைவடைந்துவிடும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு சுற்றுலாத்துறை மேம்படும்? இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் முறையாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார். 

- எம்.மனோசித்ரா

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.