இலங்கையில் இனி பிறக்கும் குழந்தைக்கும் தேசிய அடையாள அட்டை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இனி பிறக்கும் குழந்தைக்கும் தேசிய அடையாள அட்டை?

சிறுவர் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், குழந்தையொன்று பிறக்கும் போதே, தேசிய அடையாளஅட்டை இலக்கத்தை பெற்றுக்கொடுக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகியவுடன், அதே இலக்கத்திலான தேசிய அட்டையாளஅட்டையை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

உத்தேச புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவிடம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது.


$ads={2}

உத்தேச புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய 7 விடயங்களை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

சுகாதார சேவையை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்வதுடன், நாடு பூராகவும் இந்த சேவையை சமமான முறையில் வழங்குவதற்காக தேசிய சுகாதார கொள்கையொன்றை பின்பற்றுவதற்கான பிரிவொன்றை அனைத்து பகுதிகளிலும் ஸ்தாபிக்கின்றமை தொடர்பிலான யோசனையொன்றையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.