அமைச்சராகவுள்ள ஞானசார தேரர்? ரதன மற்றும் ஞானசார தேரர்களிடையே இருந்த இணக்கப்பாட்டை போட்டுடைத்தார் ஞானசார!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சராகவுள்ள ஞானசார தேரர்? ரதன மற்றும் ஞானசார தேரர்களிடையே இருந்த இணக்கப்பாட்டை போட்டுடைத்தார் ஞானசார!


எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், குறுகிய காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, அதனை தனக்கு வழங்கும் இணக்கப்பாடு இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தகவல் வெளியிட்டுள்ளார்.


அத்துரலியே ரதன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று அல்லது ஆறு மாதங்கள் பதவி வகிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.


$ads={2}


இப்படியான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டே ரதன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.


இந்த இணக்கப்பாடு சம்பந்தமாக ரதன தேரருடன் உடன்படிக்கையோ, கொடுக்கல் வாங்கல்களோ இல்லை. இது நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு. உறுதியளித்தது போல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது ரதன தேரரின் கைகளிலேயே உள்ளது.


அத்துரலியே ரதன தேரர், பதவி விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எனக்கு வழங்காவிட்டாலும் அந்த பதவியின் மூலம் நான் செய்ய நினைத்த சேவையை செய்வேன். அவர் நம்பிக்கையை மீறி செயற்பட்டால் எனது சேவை தொடரும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பிரச்சினையில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரதன தேரர் கடந்த 5 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். சிறிது காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.