கொரோனா தடுப்பூசி தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!


இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் விளக்கிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அதன்படி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னணி தொழிலாளர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும், தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் சேமித்து வைக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதன் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவின் கீழ் உள்ள பணிக்குழு தடுப்பூசியை வழங்குவதற்கான நிலையங்களுக்கு கொண்டு செல்வது மற்றும் சேமிப்பது தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் கையாளும் எனவும், இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


அத்துடன் தடுப்பூசிகளைக் களஞ்சியப்படுத்துவதற்கு ஏதுவான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான இடங்களுக்கு தேவையானோர் வரவழைக்கப்பட்டு அவ்விடங்களிலேயே தடுப்பூசி வழங்கப்படும்.


மாறாக ஒவ்வொரு இடங்களுக்கும் எடுத்துச்சென்று தடுப்பூசி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.