ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிற்கு பலி! பிரித்தானியாவின் தற்போதைய நிலவரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிற்கு பலி! பிரித்தானியாவின் தற்போதைய நிலவரம்!

2020 ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.


இதன்படி, இன்றைய தினம் 1041 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


$ads={2}

இந்த எண்ணிக்கை ஒரே நாளில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்களாகும்.


அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி, செவ்வாய்க்கிழமை 830 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருந்த நிலையில், இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.


இது நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். மேலும் இன்றைய தினம் 62,322 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.