ஆஸ்திரேலியாவுக்குள் அத்துமீறிய 'ஜோ த பிஜன்' அமெரிக்க புறா; கொலை செய்ய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆஸ்திரேலியாவுக்குள் அத்துமீறிய 'ஜோ த பிஜன்' அமெரிக்க புறா; கொலை செய்ய உத்தரவு!


அமெரிக்காவிலிருந்து பசுபிக் பெருங்கடலின் வழியில் 15,000 கி.மீ தாண்டி அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த ஒரு புறாவை கொலை செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.

தற்போது காணப்படும் கொரோனா பரவல் காரணமாக புதிதாக சுகாதார ஆபத்து ஏற்படக்கூடும் என்று முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

அமெரிக்காவிலிருந்து 15,000  கி.மீ தொலைவில் பசுபிக் பெருங்கடலை கடந்து வந்த கப்பலின் மூலம் பயணித்து குறித்த புறா அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

குறித்த புறாவை மெல்பர்னில் வசிப்பவர் ஒருவர் பிடித்துள்ளதுடன் பறவையின் காலில் இணைக்கப்பட்ட ஒரு குறியீட்டு குறிச்சொல் பறவை அமெரிக்காவைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

'ஜோ த பிஜன்' என்று பிரபலமாக அறியப்பட்ட இந்த பறவையை கொலை செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த பறவையை கொலை செய்ய அவுஸ்திரேலியாவினால் எடுக்கப்பட்ட முடிவு மறுபரிசீலனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.