ஆசிரியர்கள் பற்றாக்குறை; விமானப்படை அதிகாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர்கள் பற்றாக்குறை; விமானப்படை அதிகாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானம்!!


ஆசிரியர் பற்றாகுறைக்கு தீர்வாக பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் விமானப்படை அதிகாரிகள் வவுனியா மற்றும் கெப்பிட்டிகொல்லாவ பிரதேசங்களில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறைக்கு தீர்வாக விமானப்படை அதிகாரிகளை ஆசிரியர்களாக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

$ads={2}

இதனடிப்படையில் இந்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடசாலை கற்பிக்க விமானப்படை அதிகாரிகளை பயன்படுத்த தயாராகி வருகின்றனர் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை முற்றாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

19 கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவது தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு உடனடியாக நியமனங்களை வழங்கி, அவர்களை பின்தங்கிய பாடசாலைகளுக்கு நியமிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

பின்தங்கிய பாடசாலைகளுக்கு விமானப்படை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போதே ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.