புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பிரபல பாடசாலை அனுமதிக்குத் தடை? அமைச்சர் பந்துல கேள்வி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பிரபல பாடசாலை அனுமதிக்குத் தடை? அமைச்சர் பந்துல கேள்வி!


ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வெட்டுப் புள்ளிகள் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது சிக்கலானது என அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அத்துடன், இது தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு அமைச்சரவையின் ஊடாக கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இந்த விடயத்தில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றனவா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.