புத்தளத்தில் மர்மமான முறையில் ஆயிரக்கணக்கான பறவைகள் திடீர் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளத்தில் மர்மமான முறையில் ஆயிரக்கணக்கான பறவைகள் திடீர் மரணம்!


புத்தளத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வனாத்தவில்லு, எலுவான்குளம், ரால்மடுவ வயல்நிலப் பகுதியிலுள்ள வயல் நிலங்களில் இவ்வாறு உயிரிழந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


உயிரிழந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்படவில்லை என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.


$ads={2}


குறித்த பறவைகளின் மரபணு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவர் வைத்தியர் இசுரு கோட்டேகொட தெரிவித்து்ளார்.


இந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறிகள் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த வாரம் இந்த வயல் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து கிடந்துள்ளது.


வீட்டு குருவி, நெல் குருவி உட்பட பல வகையான பறவைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த பறவைகள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.