இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்!


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் ஆலயடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண், கொழும்பு 14 ஐ சேர்ந்த 91 வயது பெண், அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் மற்றும் தர்கா நகரைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.


$ads={2}


இந்நிலையில், இலங்கையில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


அத்தோடு இன்று 555 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 826 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.