பொலிஸ் நிலையம் சென்ற குற்றவாலிக்கு கொரோனா - பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் நிலையம் சென்ற குற்றவாலிக்கு கொரோனா - பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா தொற்றுக்கு இலக்கான நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமைக்காக உடுகம பொலிஸ் நிலையத்திற்கு வந்ததையடுத்து உடுகம பொலிஸ் ஓ.ஐ.சி, பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உடுகம சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார். 

கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த நபர் கொழும்பில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாரதியாக பணிபுரியும் இவர் உடுகம தெற்கு பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.


$ads={2}

பி.சி.ஆர் முடிவுகளைப் பெறுவதற்கு முன்னர், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக அண்டை வீட்டாரால்  குற்றம் சாட்டி நேற்று (21) பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டார்.

பொலிஸ் அதிகாரி இந்த புகாரை விசாரித்து நிலையத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். 

இதனையடுத்த்ய், ஓ.ஐ.சி, போலீஸ் சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.