கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், பிரைட் ரைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பல் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


சமனிலையான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், போதியளவு உறக்கம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


விட்டமின் டி குறைப்பாடு இருந்தால் அது குறித்து கவனம் செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஒவ்வொரு வாரமும், அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை நாட்டில் கொரோனா வைரஸ் வகைகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும், சில வேளைகளில் இலங்கையிலேயே இந்த வைரஸ் வகையில் மாற்றடைந்த புதிய வைரஸ் வகையொன்று உருவாவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.