கம்பஹாவில் வெடிப்பு சம்பவம்; ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பஹாவில் வெடிப்பு சம்பவம்; ஒருவர் பலி!

கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொட்டதெனியாவ பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றின் கொதிகலன் வெடித்ததில் அங்கு பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

இந்த வெடிப்பு சம்பவத்தில் குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இந்திய பிரஜைகளே இவ்வாறு அனர்த்தத்திற்குள்ளாகி உள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.