அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கை தடை செய்த ட்விட்டர் நிறுவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கை தடை செய்த ட்விட்டர் நிறுவனம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நிரந்தரமாக தடை செய்வதாக ட்விட்டர் நிறுவனம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அதன் குடிமை ஒருமைப்பாட்டு விதிகளை மீறியதற்காக, நிரந்தரமாக தடை விதிக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் நேற்று (06) அச்சுறுத்தியது, மேலும் அவர் பதிவிட்ட மூன்று விதி மீறும் ட்வீட்களை நீக்கயும் உத்தரவிட்டது.

$ads={2}

ட்விட்டர் டிரம்பின் கணக்கை 12 மணி நேரம் பூட்டியதாகவும், குறித்த விதி மீறல் ட்வீட்களை நீக்காவிட்டால், அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கம் செய்யப்படும் என்றும் ட்விட்டர் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

“வாஷிங்டன் டி.சி.யில் அடிப்படை அற்ற மற்றும் தொடர்ச்சியான வன்முறை சூழ்நிலையின் விளைவாக, எங்கள் சிவிக் ஒருமைப்பாட்டுக் கொள்கையின் தொடர்ச்சியான மற்றும் கடுமையான மீறல்களுக்காக இன்று முன்னர் வெளியிடப்பட்ட மூன்று @realDonaldTrump ட்வீட்களை அகற்ற வேண்டும்” என்று ட்விட்டர் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும் “ட்வீட் அகற்றப்படாவிட்டால், கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்படும்.” என்று ட்விட்டர் தெரிவித்திருந்தது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.