பல்கலைகழகம் தேர்வான மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைகழகம் தேர்வான மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

பிரதமரின் செயலாளர் தலைமையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இது தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் பழைய மற்றும் புதிய பரிந்துரை வெட்டுப்புள்ளிகள் என இரண்டு விதமாக பல்கலைக்கழங்களுக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றமை பிரச்சினையை தோற்றுவித்துள்ளது.


$ads={2}

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்களை சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் மாணவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீடுகளை கண்காணித்து பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களை தவிர சேர்த்துக்கொள்ள எதிர்பார்க்கப்படும் மாணவர் எண்ணிக்கை தொடர்பாக தகவல்களை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி அறிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.