நேற்று பதிவான 859 தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று பதிவான 859 தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

இலங்கையில் நேற்றைய தினம் (29) இனம் காணப்பட்ட 859 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் 313 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 211 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 79 பேர் குருநாகலை சேர்ந்தவர்கள் என்றும் களுத்துறையில் 78 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் புத்தளத்தில் 47 பேருக்கும் அம்பாறையில் 22 பேருக்கும் மாத்தறை மற்றும் அனுராதபுரத்தில் தலா 20 பேருக்கும் கேகாலையில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை காலியில் 17 பேருக்கும் மாத்தளையில் 11 பேருக்கும் இரத்தினபுரியில் 09 பேருக்கும் கண்டியில் 05 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 08 கொரோனா மரணங்களும் பதிவாகின.

இதில் 55 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 742 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறறுவரும் அதேவேளை 305 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.