நாம் துறைமுகத்தை விற்க ஒப்பந்தம் செய்யவில்லை - 40 வருடங்களில் கடனை திருப்பி செலுத்தவே ஒப்பந்தம் செய்தோம் - ராஜபக்‌ஷ அரசாங்கம் எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாம் துறைமுகத்தை விற்க ஒப்பந்தம் செய்யவில்லை - 40 வருடங்களில் கடனை திருப்பி செலுத்தவே ஒப்பந்தம் செய்தோம் - ராஜபக்‌ஷ அரசாங்கம் எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டது!

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை விற்க எமது அரசாங்கம் ஒப்பந்தம் செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்தப்படும் கடனைப் பெறுவதே இந்த ஒப்பந்தம், முதல் 12 ஆண்டுகள் வரை கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.


$ads={2}

ஜப்பானில் இருந்து கடனை எடுக்கத் தயாராக இருந்ததாகவும், அதை 0.1% வட்டிக்கு மட்டுப்படுத்தி, முதல் 12 ஆண்டுகளுக்குள் கடனை செலுத்தாது, மிகுதி 28 வருடங்க கடனை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

ஜப்பானிய அரசாங்கம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை நடைமுறையிலிருந்து நீக்கியுள்ளது, தற்போதைய அரசாங்கம் எல்லாவற்றையும் சீர்குலைத்துள்ளது, இப்போது எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.