சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை மேலும் 3 மாதங்களுக்கு தடுப்பு காவலில் வைக்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை மேலும் 3 மாதங்களுக்கு தடுப்பு காவலில் வைக்க அனுமதி!


சி.ஐ.டி. தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை மேலும் 3 மாதங்களுக்கு தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது.


இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (11) கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேவுக்கு அறிவித்துள்ளது.


$ads={2}


ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான ஆவணங்களில் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திட்டுள்ளதாகவும் இதன்போது சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையை கையளித்து தெரிவித்தனர்.


ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் கூறினர்.


தற்போது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கொரோனா தொற்று காரணமாக களுத்துறை பொலிஸ் கல்லூரியில் சிகிச்சை பெறுவதாகவும் சி.ஐ.டியினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆந் திகதி சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று வரை தடுப்பக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யும் சந்தர்ப்பத்தில் எதுவித காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று அவரது சட்டத்தரணிகள் மனு மீதான விசாரணயின் போது தெரிவித்திருந்தனர்.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.