ஆசிரியர் நியமனம் - ஜனவரி 15 இற்குள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர் நியமனம் - ஜனவரி 15 இற்குள்!

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா முடித்த 3,772 ஆசிரியர்களுக்கு 2021 ஜனவரி 15 ஆம் திகதிக்குள் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்களை ஆதாரம் காட்டி தி மார்னிங் ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட ஒன்லைன் தேர்வு முறையின் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, நியமன விருப்புக்களுக்கான விண்ணப்பம் இன்று (31) முடிவுறாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா நேற்று (30) தி மோர்னிங்க பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். தார். முன்பு திட்டமிட்டபடி.

$ads={2}


இந்த நியமனங்களை விரைவில் வழங்க நாம் முயற்சிக்கிறோம், ஏனெனில் இது அவசரமானது. என அவர் தெரிவித்துள்ளார்.

திறமைச் சித்தியுடன் டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களுக்கு அவர்களின் விருப்பின் படி, தேசிய பாடசாலைகளும் ஏனையவரகளுக்கு அவர்களது மாவட்டத்திற்குள் வழங்குவதற்கும் கரிசனை செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி,கே.எஸ். சுபோதினி தெரிவித்துள்ளார்.

நியமனங்களின் போது விண்ணப்பதாரிகளது வீடுகளுக்கும் பாடசாலைகளுக்குமிடையிலான தூரம் தொடர்பான அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 15 இல் நியமனம் வழங்கப்படும் என்ற கல்வி அமைச்சின் செயலாளரின் கூற்றில் தமக்கு நம்பிக்கை இல்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில் இது தொடர்பாக அவர்கள் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதை மகிந்த ஜயசிங்க விளக்கியுள்ளார்.

எனவே, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, கல்வி அமைச்சு இந்த நியமனங்களை இந்த வருடத்திற்குள் வழங்குவதாக பகிரங்கமாக வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் அவர்கள் செயற்பட வில்லை என மகிந்த ஜயசிங்க குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமக்கு அழைப்பு இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அழைப்பு கிடைக்கும் பட்சத்தில் தமது சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.