தனது 13 வயது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது! மட்டக்களப்பில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது 13 வயது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது! மட்டக்களப்பில் சம்பவம்!


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயதான தனது சொந்த மகளை பாலியில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சந்தேகத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் உத்தரவிட்டார்.


சம்பவதினமான புதன்கிழமை மதுபோதையில் காணப்பட்ட சந்தேன நபர் தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.


இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


தகவல் - கனகராசா சரவணன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.