இலங்கை உட்பட 11 நாடுகளிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு நுழையத் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை உட்பட 11 நாடுகளிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு நுழையத் தடை!

கொரோனா தொற்று காரணமாக ஜப்பான் அரசாங்கம் இன்று(14) முதல் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

இதற்கமைய இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.

கொரோனா நிலைமையைச் சமாளிக்க விதிக்கப்பட்ட டோக்கியோவுக்கான ஒரு மாத கால அவசரகால நிலை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.


$ads={2}

அத்துடன் ஜப்பான் தனது எல்லைகளை இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளில் தாய்வான், ஹொங் கொங், மியன்மார், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, வியட்நாம், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு நுழையும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த 11 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த வணிகப் பயணிகளுக்கு டிசம்பர் 28 முதல் ஜனவரி 31 வரை ஜப்பான் விதித்த நுழைவுத் தடையில் இருந்து விலக்கு பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.