நுவரெலியா செல்ல முட்பட்ட 106 நபர்களுக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுவரெலியா செல்ல முட்பட்ட 106 நபர்களுக்கு கொரோனா உறுதி!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் களுகல பகுதியிலுள்ள வீதி தடையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட எண்டிஜன் பரிசோதனைகளில் 106 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் இனங்காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் கே.காமதேவன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் வீதிகளில் ஒன்றான களுகல பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 1825 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}

இவ்வாறு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளிலேயே 106 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக, சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானோர் அம்பகமுவ வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனையோர் மஸ்கெலிய, கொட்டகல, நாவலபிட்டிய உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.