ஓட்டமாவடி உட்பட கிழக்கில் மேலும் 07 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓட்டமாவடி உட்பட கிழக்கில் மேலும் 07 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளம்!

கிழக்கிலங்கையில் 07 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக நேற்று (14) முதல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை தெற்கு, காத்தான்குடி, அம்பாறை, கிண்ணியா, காரைதீவு, ஓட்டமாவடி, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஒரு வார காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


$ads={2}

கடந்த 12 மணித்தியாலத்தில் 47 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.