WATCH: தம்மிகவின் பாணி மக்கள் மத்தியில் வினியோகம்; தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்கள் பெருந்திரள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: தம்மிகவின் பாணி மக்கள் மத்தியில் வினியோகம்; தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்கள் பெருந்திரள்!

கேகாலை பகுதியை சேர்ந்த ஆயுர்வேத பயிற்சியாளர் தம்மிக பண்டாரவின் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் அவரது தயாரிப்பான உள்நாட்டு மருந்தைப் பெறுவதற்கான தனிமைப்படுத்தல்  விதிமுறைகளை மீறி கூடிவந்துள்ளனர்.

இது அவர் குறித்த ஆயுர்வேத மருந்து கொரொனா நோய்க்கு நிவாரணி என பல சமூக வலைதளம் ஊடக பிரச்சாரம் மேற்கொண்டதன் விளைவாகவே நிகழ்ந்துள்ளது.

$ads={2}

மேலும் குறித்த பாணியை இன்று (25) விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை பெற்றுக் கொள்ள மக்கள் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நிற்பதாகக் கூறப்படுகிறது.

முந்தைய சந்தர்ப்பத்தில் கேகாலை மாவட்ட செயலாளர் தலையிட்டு குறித்த பாணி விநியோகத்தை நிறுத்திவிட்டார், இதன் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர்.

இலங்கையின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில், குறித்த பாணியை விநியோகத்திற்கு ஒப்புதல் பெற தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இன்னும் பெறவில்லை என்று கூறியுள்ளது.

மேலும் குறித்த பாணியை விநியோகிக்க தம்மிக பன்டாரவுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அரசாங்கம் செய்தியாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளது, ஆனால் ஆயுர்வேத துறையின் மருந்தியல் பிரிவினால் ஆயுர்வேத உணவாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு வினியோகம் செய்ய தடையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.