அமெரிக்காவில் புறப்பட தயாராக ஓடுபாதையில் நின்றுக்கொண்டிருந்த விமானத்தின் இறக்கையின் மீது ஏறி அட்டகாசம் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நிவேடா மாநிலத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள McCarran விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ்-ன் பயணிகள் விமானம் போர்ட்லேண்டிற்கு புறப்படத் தயாராக ஓடுபாதையில் நின்றுக்கொண்டிருந்தது.
அப்போது, திடீரென இளைஞர் ஒருவர் விமானத்தின் இறக்கையில் ஏறி அட்டகாசம் செய்துள்ளார். விமான இறக்கையின் மீது நபர் ஒருவர் இருப்பதை கண்ட பயணிகள் பீதியடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து விமான நிறுவனம் உடனே பொலிசாருக்க தகவளித்துள்ளது.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், அந்த இளைஞரை இறங்கும் படி கோரினர். ஆனால், அவன் இன்னும் உயரமாக ஏற முயன்றுள்ளான்.
இறக்கையின் மீது ஏறிய இரண்டு பொலிசார், அவனை பிடிக்கச் அருகே செல்ல இளைஞர் வழுக்கி கீழே விழுந்தான். இதில் அவன் தலையில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பொலிசார் அவனை கைது செய்தனர். இச்சம்பவத்தை அடுத்து முழு சோதனைக்காக விமானம் திரும்பியது.
மனநோய் அல்லது குறைபாடு தான் இச்சம்பவத்திற்கான காரணம், அடையாளம் தெரியாத சந்தேக நபர் விமான நிலைய பாதுகாப்பு சுவருக்கு மேல் ஏறி அப்பகுதிக்குள் நுழைந்தார் என அதிகாரிகள் கூறினர்.
அவனுக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Appeared to be an interesting day at McCarran today. pic.twitter.com/M7vv3Gh6oT #vegas
— Mick Akers (@mickakers) December 13, 2020