PHOTOS: நேற்றைய இலங்கையின் வான்பரப்பில் நிகழ்ந்த அதிசயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: நேற்றைய இலங்கையின் வான்பரப்பில் நிகழ்ந்த அதிசயம்!


வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் நேற்றைய தினம் (21) சூரிய மண்டலத்தின் அளவு கோலுக்கு அமைய ஒரு தசத்திற்கும் குறைவான இடையில் தென்பட்டுள்ளன.


இந்த காட்சியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையிலும் இந்த நிகழ்வை காணக் கூடியதாக இருந்ததாக ஆத்தர் சீ கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


$ads={2}


இரு கோள்களும் இவ்வாறு அருகில் தென்பட்ட நிகழ்வானது 397 வருடங்களின் பின்னர் நிகழ்ந்தது எனவும், முன்னதாக 1623இல் இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.


இந்த நிகழ்வானது வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையிலான கிரக சமநிலை வீதம் என அழைக்கப்படுகிறது.


அத்துடன் சூரிய மண்டலத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு பூமியில் புயல் போன்ற காலநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என பரவி வரும் கருத்து பொய்யானது என ஆத்தர் சீ கிளார்க் மத்திய நிலையத்தின் சிரேஷ்ட விண்வெளி ஆய்வாளர் இந்திக மெதன்கொட தெரிவித்துள்ளார்.






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.