கொழும்பில் Park & Ride வசதி ஜனவரி முதல்! அப்படியென்றால் என்ன? அது எவ்வாறு செயல்படவுள்ளது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் Park & Ride வசதி ஜனவரி முதல்! அப்படியென்றால் என்ன? அது எவ்வாறு செயல்படவுள்ளது?

கொழும்பில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் Park & Ride பரீட்சார்த்த நடவடிக்கை இன்று செயற்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மாதும்புர பஹுவித போக்குவரத்து நிலையத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.


$ads={2}

பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு தெளிவுபடுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

தங்கள் தனிப்பட்ட வாகனத்தில் கொழும்பிற்கும் வரும் நபர்கள் உரிய இடத்தில் நிறுத்திவிட்டு சொகுசு பேருந்து மூலம் பயண இடத்தை சென்றடையும் நடவடிக்கையே Park & Ride நடைமுறையாகும்.

கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை இதன் மூலம் குறைத்து போக்குவரத்து நெரிசலை இல்லாமல் செய்வதே இந்த நடைமுறையின் நோக்கமாகும்.

தினமும் காலை 6 மணியில் இருந்து 15 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்துகளில் வைபை வசதிகள் உள்ளதுடன் விரைவில் இலத்திரனியல் அனுமதி பத்திரம் முறை ஒன்றை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

$ads={1}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.