ஜப்பான் நாட்டில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்க ஜப்பான் அரசு தீர்மானம் - பல மில்லியன் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜப்பான் நாட்டில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்க ஜப்பான் அரசு தீர்மானம் - பல மில்லியன் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம்!

145 மில்லியன் மக்களுக்கான கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

Pfizer, AstraZeneca மற்றும் Moderna ஆகிய நிறுவனங்களிடம் இருந்து குறித்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒருவருக்கு தலா இரண்டு தடுப்பூசிகள் வீதம் 145 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்காக 290 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.


$ads={2}

அத்துடன், குறித்த தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்காக 10 ஆயிரத்து 500 அதி உயர் குளிரூட்டிகளை கொள்வனவு செய்யவும் ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தமது நாட்டு மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.