எவெரெஸ்ட் சிகரத்தின் உயரம் மேலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எவெரெஸ்ட் சிகரத்தின் உயரம் மேலும் அதிகரிப்பு!


உலகின் மிக உயரமான இடமான எவெரஸ்ட் சிகரத்தின் உயரத்தின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.


பல தசாப்தங்களின் பின்னர் நேபாளமும் சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்து இணப்பாட்டுக்கு வந்துள்ளன.


இணக்கம் காணப்பட்ட, எரெஸ்ட்டின் புதிய உயரம் நேபாளத் தலைநகர் காத்மண்டில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.


$ads={2}


இதன்படி, எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீற்றர்கள் (29,031 அடி) ஆகும். இது நேபாளத்தினால் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் முந்தைய உயர அளவைவிட 86 சென்ரிமீற்றர் (2.8 அடி) அதிகமாகும்.


அதேபோன்று சீனாவின் உத்தியோகபூர்வ தரவுகளின்படியான முந்தைய எவரெஸ்ட் உயரத்தைவிட புதிய உயரம் 4 மீற்றர்கள் அதிகமாகும்.


2015 ஆம் ஆண்டின் பாரிய பூகம்பம் உட்பட, புவித்தட்டுகளின் நகர்வுகள், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டதையடுத்து அதன் உயரத்தை அளவிடுவதற்கு நேபாளம் தீர்மானித்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.