
மாலைதீவில் இலங்கையர்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுமா என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இது உண்மையாக இருந்தால், இலங்கை தனது சொந்த குடிமக்கள் சிலரின் "இறுதி சடங்குகளை எளிதாக்க’ அண்டை நாட்டைக் கோர வேண்டியது அவமானகரமானது.
அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் அந்தந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப இறுதி சடங்குகளைச் செய்ய உரிமை இருக்க வேண்டும்."
