மஹர சிறைச்சாலை கலவர சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை கையளிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹர சிறைச்சாலை கலவர சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை கையளிப்பு!


மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.


நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் இன்று (07) பிற்பகல் குறித்த இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மஹர சிறைச்சாலை அமைதியின்மையினால் உயிரிழந்த 11 பேரில் 7 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.


$ads={2}


பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரின் சடலங்கள் குறித்த பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும், இதுவரை அடையாளம் காணப்படாத நால்வரின் உடல்கள் தொடர்பில் மரபணு பரிசோதனை அல்லது கைவிரல் அடையாள பரிசோதனையை மெற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.