10 ஆயிரம் பெறுமதியான உணவுப்பொதிக்கு பதிலாக 10 ஆயிரம் வழங்குங்கள்! சஜித் முன்வைத்த கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 ஆயிரம் பெறுமதியான உணவுப்பொதிக்கு பதிலாக 10 ஆயிரம் வழங்குங்கள்! சஜித் முன்வைத்த கோரிக்கை!

sajith-premadasa-opposition-leader-yazhnews

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளுக்குப் பதிலாக 10 ஆயிரம் ரூபாவை பணமாக அரசாங்கம் வழங்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை முன்வைத்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்தார்.


அரசினால் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


$ads={2}


மேலும், குறித்த உணவுப்  பொதியில் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் அதில், 7 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.


அத்துடன், இவ்வாறு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.