இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை மாலைதீவு அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், சாதகமாக பதிலளித்திருப்பதாகவும் செய்தி வௌியாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதால் முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன.
$ads={2}
இந்நிலை காரணமாக நாட்டில் முஸ்லிம் மக்கள் பலரும் கொரோனா பரிசோதனையை நடத்த முன்வரவில்லை என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக நீதியமைச்சர் அலி சப்ரி பதவியிலிருந்து விலகப்போவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வாக இலங்கை அரசாங்கம், மாலைதீவிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.