இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசு சம்மதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசு சம்மதம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இலங்கை அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை மாலைதீவு அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், சாதகமாக பதிலளித்திருப்பதாகவும் செய்தி வௌியாகியுள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதால் முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன.


$ads={2}


இந்நிலை காரணமாக நாட்டில் முஸ்லிம் மக்கள் பலரும் கொரோனா பரிசோதனையை நடத்த முன்வரவில்லை என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.


இதனிடையே ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக நீதியமைச்சர் அலி சப்ரி பதவியிலிருந்து விலகப்போவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.


இதனையடுத்து மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வாக இலங்கை அரசாங்கம், மாலைதீவிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.